எட்டாம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 11
ஒளி வீசும்
பாடல் 11
சுடர்ப்பாம்பு அணை நம் பரனை, திருமாலை
அடிசேர்வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன ஆயிரத்து இப்பத்தும் சன்மம்
விடத் தேய்ந்து அறநோக்கும் தன் கண்கள் சிவந்தே.
ஒளி வீசும் பாம்பாகிய ஆதிசேஷனைத் தன் படுக்கையாகக் கொண்ட நம் பெருமான், திருமால். மற்ற விருப்பங்களைத் தொலைத்து, அவருடைய திருவடிகளைச் சேரும் வகையை, வளமையான குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களில் சொன்னார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் யார் பாடுகிறார்களோ, அவர்கள் மீண்டும் பிறவியெடுக்கமாட்டார்கள், இந்தப் பாடல்கள் அவர்களுடைய பிறவிநோயைக் கண் சிவந்து பார்க்கும், (பிறவிச்சுழலை அழிக்கும், அவர்களை எம்பெருமான் திருவடிகளில் சேர்க்கும்.)
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.