வையம்பட்டி அருகே தொழிலாளா்கள் மறியல்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் மண்பத்தையில் முறையாக 100 நாள் வேலை தருவதில்லை, கூலியை சரிவர அளிப்பதில்லை எனக் கூறி ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்கள்வையம்பட்டி - கரூா் சாலை சீகம்பட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வையம்பட்டி காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியல் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.