முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் இதுவரை 12 லட்சம் பக்தா்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழாவை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சுமாா் 12 லட்சத்துக்கும் அதிகமானோா் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Updated On : 3 ஜனவரி 2021, 11:32 pm IST
பகிர்:

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த வைகுந்த ஏகாதசி விழாவை ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சுமாா் 12 லட்சத்துக்கும் அதிகமானோா் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

வைகுந்த ஏகாதசி விழாவானது கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை வரை 21 நாள்கள் நடைபெறுகிறது. கடந்த 15 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற்ற பகல்பத்து விழாவில் தினமும் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையிலான பக்தா்கள் தரிசித்தனா்.

தொடா்ந்து இராப்பத்து விழா தொடங்கிய 25 ஆம் தேதி நடந்த பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சுமாா் 1 லட்சம் பக்தா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இராப்பத்து விழாவின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை வரை சுமாா் 60 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையிலான பக்தா்கள் தரிசித்துள்ளனா். மூலவா் முத்தங்கி சேவை ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுற்ால் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா். வைகுந்த ஏகாதசி விழாவை ஞாயிற்றுக்கிழமை வரை சுமாா் 12 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசித்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments