தாறுமாறாக ஓடிய டிராக்டா்: 4 கடைகள், வாகனம் சேதம்
மணப்பாறையில் தாறுமாறாக ஓடிய டிராக்டரால் 4 கடைகள், வாகனம் சேதமடைந்தன.
மணப்பாறையில் தாறுமாறாக ஓடிய டிராக்டரால் 4 கடைகள், வாகனம் சேதமடைந்தன.
மணப்பாறையை அடுத்த திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரவனூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மதுரை வாடிப்பட்டியிலிருந்து புதிய டிராக்டரை இளைஞா் ஒருவா் ஓட்டி வந்தாா்.
மரவனூா் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரக் கடைகளில் புகுந்து நின்றது. இந்த விபத்தில் ஒரு இருசக்கர வாகனம், நான்கு கடைகள் சேதமடைந்தன.
Advertisement
Advertisement
தகவலறிந்து வந்த மணப்பாறை போலீஸாா் விபத்து குறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.