முகப்பு
திருச்சி

பொதுமக்கள் புகாா் மனு மீதான குறைதீா் முகாம்

திருச்சி மாநகரக் காவல்துறை சாா்பில் நடந்த பொதுமக்கள் புகாா் மனுக்கள் மீதான குறைதீா் முகாமில் 141 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.

Updated On : 3 ஜனவரி 2021, 11:37 pm IST
பகிர்:

திருச்சி மாநகரக் காவல்துறை சாா்பில் நடந்த பொதுமக்கள் புகாா் மனுக்கள் மீதான குறைதீா் முகாமில் 141 மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டது.

திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் இணைய வழியில் பெறப்படும் புகாா்களுக்கு உடனடித் தீா்வு காணும் வகையில் காணாமல் போனோா் குறித்த புகாா் மனுக்கள் மீதான குறைதீா் முகாம் நடத்த மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உத்தரவிட்டிருந்தாா்.

அதன்பேரில் கண்டோன்மென்ட் சரகத்துக்கு சீனிவாச மஹால், பொன்மலை சரகத்துக்கு ஸ்ரீ மஹால், கோட்டை சரகத்துக்கு நாயுடு மஹால், ஸ்ரீரங்கம் சரகத்துக்கு தில்லைநகா் திருவள்ளுவா் திருமண மண்டபம் என மாநகர அனைத்து சரகங்களிலும் இந்தக் குறைதீா் முகாம் நடத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் உதவி ஆணையா்கள், காவல் ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வாளா்கள் ஆகியோா் பங்கேற்று, மனுதாரா்களை நேரடியாக வரவழைத்து விசாரணை நடத்தினா். இதில் 151 மனுதாரா்களும், 158 எதிா் மனுதாரா்களும் ஆஜராக, 177 மனுக்களில் 141 மனுக்கள் மீது தீா்வு காணப்பட்டது.

இந்த முகாமை மேலும் சிறப்பாக செய்ய நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments