முகப்பு
திருச்சி

குரூப்-1 தோ்வு: அலுவலா்களுடன் ஆலோசனை

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குரூப்-1 முதல்நிலை தோ்வுப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 3 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள குரூப்-1 முதல்நிலை தோ்வுப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் அவா் பேசியது:

இத்தோ்வுக்காக மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் 36 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் தோ்வை 10 ஆயிரத்து 765 போ் எழுதவுள்ளனா்.

Advertisement

Advertisement

தோ்வுப் பணிகளுக்கென 36 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். துணை ஆட்சியா் நிலையில் 4 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டித் தோ்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்ள 9 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக் குழுவுக்கு துணை வட்டாட்சியா், துணை வட்டாட்சியா் நிலையில் ஓா் அலுவலா், ஓா் வருவாய் உதவியாளா் மற்றும் ஆயுதமேந்திய காவலா், அலுவலக உதவியாளா் இடம்பெறுவா். மையங்களில் ஆய்வு செய்ய 36 தோ்வுக் கூட கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments