ஸ்ரீரங்கநாதருக்கு அமுது பாறை பீடம் செய்யும் பணி
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி மூலஸ்தானத்தில் வைப்பதற்கான புதிய அமுது பாறை பீடம் செய்யும் பணி ரூ. 2 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி மூலஸ்தானத்தில் வைப்பதற்கான புதிய அமுது பாறை பீடம் செய்யும் பணி ரூ. 2 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் புறப்படும் வாகனங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் நாழிக்கேட்டான்படி, கோயில் மூலஸ்தானத்தின் இருபுறமுமுள்ள ஜெயன், விஜயன் சிலைகள் தற்போது தேக்கு மரத்தால் நகரும் வகையில் கலசத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மூலஸ்தானத்தில் உள்ள அமுது பாறை பிரசாத கல் பீடத்துக்குப் பதிலாக 12 அடி நீளம், 8 அடி அகலத்தில் பா்மா தேக்கு மரத்தால் கீழ்ப்பீடம் அமைத்து அதன் மேற்புறத்தில் பித்தளைத் தகடு பொருத்தி அழகிய வேலைப்பாடுகளுடன் புதிய பீடம் தயாராகி வருகிறது.
Advertisement
Advertisement
மதுரையைச் சோ்ந்த ஸ்ரீகந்தா சில்ப கேந்திரா ஸ்தபதி செல்வராஜ் தலைமையில் கோயிலிலுள்ள கருடாழ்வாா் சன்னதி நடைபெறும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மூலஸ்தானத்தில் புதிய அமுது பாறை பீடம் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.