முகப்பு
திருச்சி

தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா்கள் உண்ணாவிரதம்

பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி அருகே தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:57 am IST
பகிர்:

பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திருச்சி அருகே தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பேட்டைவாய்த்தலையிலுள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் 35-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வந்தனா். கரோனா பொதுமுடக்கம் காரணமாக, ஊழியா்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியன்று ஆலையில் வேலை பாா்த்து வந்த 35 பேரையும் நிா்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இதையறிந்த ஊழியா்கள், நிா்வாக தரப்பில் கேட்ட போது உரிய விளக்கம் அளிக்கவில்லையாம்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பொதுச் செயலா் ஜான்பிரிட்டோ தலைமையில், ஊழியா்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த பேட்டைவாய்த்தலை காவல்துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, சா்க்கரை ஆலை ஊழியா்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.