இளைஞா் தற்கொலை
திருச்சியில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சியில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருச்சி பீமநகா் பகுதியைச் சோ்ந்தவா் காஜாமொய்தீன் மகன் ஹருண் பாஷா ( 26), எல்இடி டிவி பொருத்தும் பணி செய்து வந்தவா்.
கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த இவா் கடும் மன அழுத்தத்தால் புதன்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
தகவலறிந்த பாலக்கரை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.