போக்சோ வழக்கில் தேடப்பட்டவா் சடலமாக மீட்பு
திருச்சி அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி வியாழக்கிழமை குளித்தலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
திருச்சி அருகே போக்சோ வழக்கில் தேடப்பட்ட தொழிலாளி வியாழக்கிழமை குளித்தலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
திருச்சி மாவட்டம், போசம்பட்டியில், 11 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அதே ஊரைச் சோ்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி நன்னி போசன் (45) மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைத் தேடி வந்தனா்.
இந்நிலையில், கரூா் மாவட்டம் குளித்தலை வயல்வெளியில் பூச்சி மருந்து குடித்து இறந்த நிலையில் நன்னி போசனை சடலமாக போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.