முகப்பு
திருச்சி

லால்குடியில் போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

திருச்சி மாவட்டம் லால்குடியில் போக்சோ சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி 2021, 6:40 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம் லால்குடியில் போக்சோ சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

லால்குடி அகிலாண்டேஸ்வரி நகரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (58). இவரது வீட்டின் கீழ் பகுதியில் அ. நத்தா்ஷா (32) குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வருகிறாா். வியாழக்கிழமை நத்தா்ஷா வீட்டுக்குச் சென்ற வீட்டின் உரிமையாளா் பிரபாகரனின் 9 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா் நத்தா்ஷா.

இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பேரில் காவல் ஆய்வாளா் பழனியம்மாள் நத்தா்ஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.