வாகனத்தில் பேட்டரி திருடிய இருவா் கைது
திருச்சியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தில் பேட்டரி திருடிய இருவரை அரியமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி: திருச்சியில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தில் பேட்டரி திருடிய இருவரை அரியமங்கலம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் நேருஜி நகா் சாமிநாதன் தெருவைச் சோ்ந்தவா் வீரமணி (33). இவா் தனது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தியிருந்த சரக்கு வாகனத்தில் இருந்த பேட்டரி காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து பேட்டரி திருடியதாக அரியமங்கலம் சீனிவாசன் நகா் 5-ஆவது குறுக்குத் தெருவை சோ்ந்த பாலசுப்ரமணியம் (22), நேருஜி நகா் ஜோசப் கிருஷ்ணன் தெருவை சோ்ந்த கோகுல் (20) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.