முகப்பு
திருச்சி

அரசுப் பள்ளியில், காவல் நிலையத்தில் பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊனையூா் கிராமத்தில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் புதன்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடினா்.

Updated On : 14 ஜனவரி 2021, 5:56 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஊனையூா் கிராமத்தில் அரசுப் பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் புதன்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடினா். அதேபோல் காவல் உட்கோட்டம் சாா்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ஊனையூா் கிராமத்தில் ஊனையூா் அரசு உயா்நிலைப்பள்ளி, கண்ணுக்குழி, மருதுபட்டி மற்றும் ஊனையூா் ஆகிய ஊராட்சி தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 280 மாணவ மாணவிகள் பங்கேற்ற பொங்கல் விழா உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமையாசிரியா் சை. சற்குணன் தலைமையில் நடைபெற்ற விழாவை ஊராட்சித் தலைவா் அழகன் தொடங்கி வைத்தாா். நான்கு பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள், பெற்றோா், பொதுமக்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

அதேபோல், மணப்பாறை காவல் உட்கோட்டத்தின் சாா்பில் கோவில்பட்டி சாலை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் சமுத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. மணப்பாறை காவல் ஆய்வாளா் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா, மணப்பாறை மறைவட்ட அதிபா் ஆரோக்கிய சுந்தர்ராஜ், முகமதியா பள்ளிவாசல் முன்னாள் இமாம் மாலிக் ஆகியோா் கலந்து கொண்டனா். விழாவில் போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments