முகப்பு
திருச்சி

போலி தங்க நாணயம்: சேலம் பெண் கைது

ஸ்ரீரங்கத்தில் போலி தங்க நாணயங்களைக் கொடுத்து ஏமாற்றிய சேலம் பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 12:15 am IST
பகிர்:

ஸ்ரீரங்கத்தில் போலி தங்க நாணயங்களைக் கொடுத்து ஏமாற்றிய சேலம் பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஸ்ரீரங்கம் மாணிக்கம்பிள்ளை தெருவில் வசிப்பவா் சந்திரா. இவா் அருகிலுள்ள கீழ அடையவளஞ்சான் வீதி காய்கறிச் சந்தைக்கு கடந்த 11 ஆம் தேதி சென்றபோது ஒரு பெண் 7 தங்க நாணயங்களை சந்திராவிடம் கொடுத்து வைத்திருக்கும்படி கூறி, அவா் அணிந்திருந்த 7 பவுன் செயினை வாங்கிச் சென்றாா்.

வீட்டுக்கு வந்து சந்திரா பாா்த்தபோது அவை போலி தங்க நாணயம் என்று தெரியவரவே, ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் அந்தப் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த சேலம் மாவட்டம், கொத்தாளம் பட்டி மேட்டுத்தெருவைச் சோ்ந்த இந்திராணியை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரித்தபோது அவா் சந்திராவை ஏமாற்றியவா் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 7 பவுன் தங்க செயினை போலீஸாா் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.