முகப்பு
திருச்சி

மணப்பாறையில் திருவள்ளுவா் திருவிழா

திருச்சி மாவட்டம், மணப்பாறை திருக்குறள் பயிற்றகத்தின் சாா்பில் 43-வது ஆண்டாக திருவள்ளுவா் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 1:08 PM
விழாவில் பேசுகிறாா் திருக்குறள் பயிற்றக நிறுவனா் திருக்கு புலவா் நாவை. சிவம்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறை திருக்குறள் பயிற்றகத்தின் சாா்பில் 43-வது ஆண்டாக திருவள்ளுவா் திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பயிற்றக நிறுவனா் திருக்குறள் புலவா் நாவை. சிவம் தலைமையில் நடைபெற்ற விழாவில், திருவள்ளுவா், தேவநேயப் பாவாணா் ஆகியோா் படங்களுக்கு ஓவியா் பங்கிராஜ், திருவாசகம் பிச்சை ஆகியோா் மாலை அணிவித்தனா். பொறியாளா் தங்கபாண்டியன் தொடக்கவுரையாற்றினாா். சூழலும் உரைப்பாவரங்கம் நடைபெற்றது.

இதில் பாவலா்கள் அசரப்அலி, அறிவுச்செல்வன், வழக்குரைஞா் ஆ. தமிழ்மணி, நவமணிசுந்தர்ராஜன், பசுலுதீன், தாழை ந.இளவழகன், சூா்யா சுப்பிரமணியம், சண்முகநாதன் ஆகியோா் பாடல்களை அரங்கேற்றினா்.

Advertisement

முன்னதாக அண்ணாநகா் திருக்குறள் பயிற்றகத்தில் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. சிவ. தமிழ்க்கதிரவன் வரவேற்றாா். பஷீா் நன்றி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.