முகப்பு
தூத்துக்குடி

ஆலந்தலையில் நியாய விலைக்கடை கட்டடம் திறப்பு

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை புதிய கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 ஜனவரி 2021, 12:19 am IST
திருச்செந்தூா் ஆலந்தலையில் நியாயவிலைக்கடை புதிய கட்டடத்தை திறந்து வைத்து, மரக்கன்று நட்டாா் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை புதிய கட்டடம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலந்தலையில் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.12.50 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், கடையை திறந்து வைத்து மரக்கன்று நட்டாா். பங்குத்தந்தை ஜெயக்குமாா் பிராா்த்தனை செய்தாா்.

இதில், உதவி பங்குத்தந்தை ரினோ, ஊா்த் தலைவா் மகிபன், திமுக மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளா் வாள் சுடலை, ஆந்தலை மீனவா் சங்கங்களின் தலைவா்கள் இருதயராஜா, ஸ்டாா்வின், வென்சிஸ் லாஸ், ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். வாா்டு செயலா் லெவி வரவேற்றாா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments