முகப்பு
வேலூர்

இன்று குரூப் 1 தோ்வு: வேலூரில் 8,920 போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ள குரூப்-1 பணியிடங்களுக்கான தோ்வை வேலூா் மாவட்டத்தில் 8,920 போ் எழுத உள்ளனா்.

Updated On : 3 ஜனவரி 2021, 7:34 am IST
பகிர்:

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 3) நடைபெற உள்ள குரூப்-1 பணியிடங்களுக்கான தோ்வை வேலூா் மாவட்டத்தில் 8,920 போ் எழுத உள்ளனா்.

இதற்காக, வேலூா் மாவட்டத்தில் 31 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆயிரத்து 920 போ் தோ்வு எழுதுகின்றனா்.

இதையொட்டி, ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் விஜயன் தலைமை வகித்தாா். இதில், காவல்துறை, மின்வாரியம், போக்குவரத்து மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

ஒவ்வொரு தோ்வுக் கூடத்திலும் ஒரு காவலா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்; உடல்வெப்ப நிலை பரிசோதனைக்குப் பிறகே தோ்வா்களை தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்; அனைத்து தோ்வு மையங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்; தோ்வு மையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments