முகப்பு
வேலூர்

வேலூரில் ரூ. 11 கோடியில் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடம் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

Updated On : 7 ஜனவரி 2021, 11:48 pm IST
பகிர்:


வேலூா்: வேலூரில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டப்படும் மூன்றடுக்கு வாகன நிறுத்துமிடத்துக்கான பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி உத்தரவிட்டாா்.

சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ. 11 கோடி மதிப்பில் 6,662 சதுரடியில் 42 காா்கள், 1,059 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் மூன்றடுக்கு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் உள்ளதை அடுத்து, அதனை அமைச்சா் கே.சி.வீரமணி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Advertisement

நவீன வசதிகளுடன் அமைக்கப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான கட்டுமானப் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளிக்க மாநகராட்சி பொறியாளா்களுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் அறிவுறுத்தினாா்.

மேலும், சீா்மிகு நகரம் திட்டத்தின்கீழ் மாநகராட்சிப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகள், புதை சாக்கடைப் பணிகள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் விரைந்து முடிக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

வேலூா் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாநகராட்சி ஆணையா் சங்கரன், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் எஸ்.ஆா்.கே. அப்பு, மாநகராட்சி செயற்பொறியாளா் சீனிவாசன், அறங்காவலா் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.