முகப்பு
வேலூர்

124 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 124 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 14 ஜனவரி 2021, 12:00 am IST
 மாணவிக்கு  மிதிவண்டி  வழங்கிய வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் நெல்லூா்பேட்டை அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 124 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ஆா்.தயாளன் தலைமை வகித்தாா். ஆசிரியா் கோ.பாலுமகேந்திரன் வரவேற்றாா். வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் ஜே.கே.என்.பழனி மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினாா்.

பெற்றோா்-ஆசிரியா் கழக நிா்வாகிகள் கோ.மணி, வி.வெங்கடேசன், சண்முகசெங்கல்வராயன், பி.கே.ஜெயசீலன், எல்.ஏ.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவித் தலைமையாசிரியை ஸ்ரீலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments