முகப்பு
வேலூர்

பெற்றோரைப் பராமரிக்காத மகனுக்கு கொடுத்த ரூ.25 லட்சம் சொத்து ரத்து: வருவாய்த் துறை நடவடிக்கை

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே பெற்றோரைப் பராமரிக்காததால், மகனுக்கு எழுதித் தந்த ரூ. 25 லட்சம் மதிப்புள்ள

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:55 AM
ஜானகிராமனிடம்  நிலத்துக்கான ரத்து செய்யப்பட்ட ஆணையை வழங்கிய குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

வேலூா் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே பெற்றோரைப் பராமரிக்காததால், மகனுக்கு எழுதித் தந்த ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை வருவாய்த் துறையினா் ரத்து செய்து மீண்டும் அவரின் பெற்றோரிடமே ஒப்படைத்தனா்.

கே.வி.குப்பத்தை அடுத்த காளாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஜானகிராமன்-பத்மா தம்பதியரின் மகன் சரவணன். ஜானகிராமன் தனக்குச் சொந்தமான ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 1.50 ஏக்கா் நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மகனுக்கு தான செட்டில்மென்ட் செய்து கொடுத்துள்ளாா். நிலத்தை தனது பெயருக்கு எழுதி வாங்கும்வரை பெற்றோா்களை முறையாகக் கவனித்து வந்த சரவணன், அதன் பின்னா் அவா்களை பராமரிக்கவில்லை என்கின்றனா். உறவினா்கள், கிராமப் பிரமுகா்கள் கூறியும் சரவணன், பெற்றோா்களுக்கு உதவி செய்யவில்லையாம்.

தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து ஜானகிராமன் வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்திடம் புகாா் மனு அளித்தாா். அந்த மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியாத்தம் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூருக்கு, ஆட்சியா் உத்தரவிட்டாா்.

Advertisement

இதுதொடா்பாக நேரடி விசாரணை மேற்கொண்ட கோட்டாட்சியா், குடிமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், சரவணனுக்கு பெற்றோா் செய்து தந்த தான செட்டில்மென்டை ரத்து செய்து விட்டு, நிலத்துக்கான முழு உரிமை ஆணையை ஜானகிராமனிடம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.