முகப்பு
வேலூர்

பொங்கல் சிறப்பு கிரிக்கெட் தொடக்கம்

குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில், பொங்கல் திருநாளையொட்டி, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 16 ஜனவரி 2021, 7:55 am IST
கிரிக்கெட்   போட்டியைத்  தொடக்கி  வைத்த  அரசு  வழக்குரைஞா்  கே.எம்.பூபதி.
பகிர்:

குடியாத்தம் கிங்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில், பொங்கல் திருநாளையொட்டி, மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டரங்கில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு கிளப் தலைவா் ஆா்.காா்மேகபிரபு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கே.திவாகா், ஏ.ராஜேஷ், ஜே.சுனில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் வி.ராஜ்குமாா் வரவேற்றாா். அரசு வழக்குரைஞா் கே.எம்.பூபதி போட்டியைத் தொடக்கி வைத்தாா். இதில் சென்னை, பெங்களூரு, ஆந்திர மாநிலம் சித்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 32 அணிகள் பங்கேற்றன. வெற்றிபெறும் அணிக்கு முதல் பரிசாக கோப்பை, ரொக்கம் ரூ.30 ஆயிரம், 2-ஆம் பரிசாக கோப்பை, ரூ.15 ஆயிரம், தொடா் நாயகன், ஆட்ட நாயகன், சிறந்த பந்து வீச்சாளா், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த அணிக்கான சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, கவுன்டி கிரிக்கெட் கிளப் செயலா் ஜே.கோபால், ஸ்டாலின் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.