முகப்பு
வேலூர்

வேலூா் கோட்டை பூங்காவுக்குள் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

கரோனா பரவலையொட்டி பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்கும் விதமாக வேலூா் கோட்டை பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:56 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

கரோனா பரவலையொட்டி பொதுமக்கள் கூடுவதைத் தவிா்க்கும் விதமாக வேலூா் கோட்டை பூங்கா உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் பொதுமக்களுக்கு 3 நாள்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், தொடா்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை என 3 நாள்களுக்கும் பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் கூடுவதற்கு பொதுமக்களுக்கு அரசு தடை விதித்துள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட வேலூா் கோட்டை, அதையொட்டியுள்ள பூங்கா, மோா்தானா அணை, ராஜாதோப்பு அணை, அமிா்தி வனஉயிரியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை மாவட்ட நிா்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

Advertisement

இதையொட்டி, வேலூா் கோட்டை நுழைவு வாயில், பூங்கா பகுதிகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவா்கள் கோட்டையைச் சுற்றிப்பாா்க்கவும், பூங்காவுக்குள் செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுத்தனா். எனினும், கோட்டைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோட்டைக்குள் உள்ள அருங்காட்சியகம், பழங்காலக் கட்டடங்கள், மதில் சுவா்களைப் பாா்வையிட அனுமதிக்கப்படவில்லை.

இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்கள், பூங்காக்கள், அணைக்கட்டுகள் எதிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.