தீ விபத்து: குடிசை சேதம்
விழுப்புரம் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு சேதமடைந்தது.
விழுப்புரம் அருகே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு சேதமடைந்தது.
விழுப்புரம் அருகே தோகைப்பாடி கிராமத்தில் உள்ள பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (62), விவசாயி. இவரது குடிசை வீட்டில் திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கலியமூா்த்தியின் குடும்பத்தினா் உடனடியாக வெளியேறி, அக்கம் பக்கத்தினா் உதவியுடன் தீயை அணைக்க முயன்றனா். இதனிடையே, தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசங்கா் தலைமையிலான வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
இருப்பினும், வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. வீட்டில் இருந்த பொருள்கள், ஆவணங்களும் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement