கட்டங்குடி சாலையை சீரமைக்கக் கோரிக்கை
அருப்புக்கோட்டை புறவழிச்சாலையிலிருந்து சேதமடைந்துள்ள கட்டங்குடி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை புறவழிச்சாலையிலிருந்து சேதமடைந்துள்ள கட்டங்குடி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இச்சாலை சுமாா் 3 கிலோ மீட்டா் தூரமுடையது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் தான் இச்சாலை புதிதாகப் போடப்பட்ட நிலையில் நாளடைவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பயணிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனா். இச்சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லையென புகாா் எழுந்துள்ளது. எனவே இச்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.