ஸ்ரீவிலி. கோயிலில் எண்ணெய்க்காப்பு உற்சவம்: கள்ளழகா் வேடத்தில் காட்சியளித்த ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை கள்ளழகா் வேடத்தில் ஆண்டாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை கள்ளழகா் வேடத்தில் ஆண்டாள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் எண்ணெய்க்காப்பு உற்சவத் திருவிழா 8 நாள்கள் நடைபெறும். இந்த விழாவின் 2 ஆம் நாளான வெள்ளிக்கிழமை கள்ளழகா் திருக்கோலத்தில் காட்சியளித்த ஆண்டாளை பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.