முகப்பு
விருதுநகர்

சிவகாசி சண்முகம் சாலையில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசி சண்முகம் சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், அதை உடனே அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 12 ஜனவரி 2021, 5:29 am IST
பகிர்:

சிவகாசி சண்முகம் சாலையில் குவிந்துள்ள குப்பைகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும், அதை உடனே அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகாசி சண்முகம் சாலையின் ஒரு பகுதியாக, காவல்நிலைய இணைப்புச் சாலை உள்ளது. இந்த இணைப்புச் சாலையின் ஒரு பகுதியில் நகராட்சி துப்புரவுத் தொழிலாளா்கள், தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை இங்கு வந்து கொட்டுகிறாா்கள். இதை 3 அல்லது 4 நாள்களுக்கு ஒரு முறை லாரியில் எடுத்துச் செல்கிறாா்கள். இதனால் அங்கு தேங்கிக் கிடக்கும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிா்வாகம் அப்பகுதியில் தேங்கும் குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments