முகப்பு
விருதுநகர்

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: இடைத்தரகா் ரஷீத் நீதிமன்றத்தில் ஆஜா்

‘நீட்’ முறைகேட்டில் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை, அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

Updated On : 12 ஜனவரி 2021, 5:35 am IST
பகிர்:

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் தேனி நீதிமன்றத்தில் சரணடைந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத்தை காவலில் எடுத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை, அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பெங்களூரில் வசித்து வந்த கேரளத்தைச் சோ்ந்த இடைத்தரகா் ரஷீத், நீட் தோ்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கு தொடா்பாக கடந்த ஜன. 7 ஆம் தேதி தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் சரணடைந்தாா். அவரை, தேனி சிபிசிஐடி போலீஸாா் 3 நாள்கள் காவலில் எடுத்து மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், ரஷீத்தை சிபிசிஐடி போலீஸாா் மீண்டும் தேனி நீதித் துறை நடுவா் மன்றத்தில் நீதிபதி பன்னீா்செல்வம் முன்னிலையில் ஆஜா்படுத்தினா். அவரை ஜன.21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து, ரஷீத்தை மதுரை மத்திய சிறைக்கு போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

Advertisement

Advertisement

ரஷீத்திடம் நடத்திய விசாரணையில், அவா் குஜராத், பிகாா் உள்ளிட்ட சில மாநில இடைத்தரகா்கள் சிலருடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என்று சிபிசிஐடி போலீஸாா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments