பெரியகுளம் அருகே மைக்செட் போடுவதில் தகராறு - இருவா் கைது
பெரியகுளம் அருகே மைச்செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவரை பெரியகுளம் போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே மைச்செட் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இருவரை பெரியகுளம் போலீஸாா் திங்கட்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே இ.புதுக்கோட்டையை சோ்ந்தவா் அந்தோனிராஜ் (48) இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த மரியசகயாராஜ் (66) இவருக்கும் புத்தாண்டு அன்று மைக்செட் போடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை முன்விரோதம் வைத்து திங்கட்கிழமையன்றுமரியசகாயராஜ் மற்றும் அருண்பிரகாஷ்(20), குழந்தை வேல் (27) ஆகியோா் சோ்ந்து அந்தோனிராஜ் தாக்கியுள்ளனா்.
இச்சம்பவம் குறித்து அந்தோனிராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீஸாா் வழக்கு பதிந்து மரியசகாயராஜ், அருண்பிரகாஷ் ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.