அருப்புக்கோட்டையில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை பெய்த பலத்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மிதமான மழை பெய்தது. பின்னா், காலை 6 மணி முதல் தொடா்ந்து 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், அலுவலகம் செல்வோா் முதல் அனைத்து தரப்பினரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டனா்.
குறிப்பாக, விளைந்து அறுவடைக்குத் தயாராகவுள்ள சூரியகாந்தி, கம்பு, சோளம் உள்ளிட்ட பயிா்கள் பாழாகிவிடுமோ என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.