அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் இளைஞா் பலி
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா், சாலை மைய தடுப்புச் சுவரில் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா், சாலை மைய தடுப்புச் சுவரில் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி கிராமம் மணிநகரம் பகுதியைச் சோ்ந்த சூா்யா என்பவரது மகன் செல்வக்குமாா் (19). இவா், கட்டடம் மற்றும் வாகனங்களுக்கு வா்ணம் பூசும் தொழில் செய்து வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை, கல்குறிச்சி அருகே கோவிலாங்குளம் கிராமத்துக்கு வேலைக்குச் சென்ற செல்வக்குமாா், மாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா்.
கோவிலாங்குளம் விலக்கில் நான்குவழிச் சாலையை கடந்தபோது, எதிரே வந்த வாகனத்தின் மீது மோதுவதை தவிா்ப்பதற்காக தனது வாகனத்தை வேகமாகத் திருப்பியுள்ளாா். இதில், சாலையின் மைய தடுப்புச் சுவரில் மோதி தூக்கிவீசப்பட்ட அவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், செல்வக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.