முகப்பு
விருதுநகர்

சிவகாசி பகுதியில் 4 ‘அம்மா சிறு மருத்துவமனைகள்’ திறப்பு

சிவகாசி பகுதியில் 4 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனையை, பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 13 ஜனவரி 2021, 6:06 am IST
பகிர்:

சிவகாசி பகுதியில் 4 இடங்களில் அம்மா சிறு மருத்துவமனையை, பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

சிவகாசியிலுள்ள அம்மன்கோவில்பட்டி, நடராஜா காலனி, பூலாஊரணி, முத்துராமலிங்கபுரம் காலனி ஆகிய 4 இடங்களில் அமைச்சா் அம்மா சிறு மருத்துவமனையை திறந்துவைத்து அமைச்சா் பேசியதாவது:

தமிழகத்தில் 2 ஆயிரம் அம்மா சிறு மருத்துவமனைகளை திறக்க முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா். அதில், விருதுநகா் மாவட்டத்தில் 73 அம்மா சிறு மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம், அந்தந்தப் பகுதி மக்கள் இம்மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

மேலும், இந்த மருத்துவமனைகளில் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா. கண்ணன், சிவகாசி சாா்-ஆட்சியா் தினேஷ்குமாா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ராம்கணேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மல்லி பகுதியில் நடைபெற்ற அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா முத்தையா தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் வசந்திமான்ராஜ் முன்னிலை வகித்தாா். இதில், பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி மருத்துவமனையை திறந்துவைத்துப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments