பொங்கல் பண்டிகை: விருதுநகா் அருகே கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளா்கள் தீவிரம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விருதுநகா் அருகே செங்கரும்பு அறுவடையில் விவசாயத் தொழிலாளா்கள் தீவிரமாக
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விருதுநகா் அருகே செங்கரும்பு அறுவடையில் விவசாயத் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். கரும்பு விலையை வியாபாரிகள் குறைத்து கேட்பதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம், எரிச்சநத்தம், முருகனேரி உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு சுமாா் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. பங்குனி மாதம் தொடங்கி சித்திரை மாதம் வரை செங்கரும்பு நடவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனா். உழவு, உரம், களை எடுத்தல், தண்ணீா் பாய்ச்சுதல் உள்ளிட்டவைகளுக்காக விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனா்.
தற்போது, செங்கரும்பு அறுவடைக்கு வந்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு வெட்டும் பணியில் விவசாயத் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கடந்தாண்டு 15 எண்ணிக்கை கொண்ட செங்கரும்பு கட்டின் விலை ரூ.310 வரை விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு கரும்பு கட்டின் விலை ரூ.285-க்கு வியாபாரிகள் வாங்கிச் செல்வதாகவும், இதனால் குறைவான லாபமே கிடைப்பதாகவும் விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா்.
இங்கு அறுவடை செய்யப்படும் செங்கரும்பு, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் விருதுநகா் மாவட்டத்தில் முக்கிய பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் விற்பனைக்காக வாங்கிச் செல்வதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.