விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா
விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 16,411 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 7 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
இதன்மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 16,418 ஆக உயா்ந்துள்ளது. இதில், 16,070 போ் குணமடைந்து வீடு திரும்பி விட்ட நிலையில், 230 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 118 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.