முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே 6ஆம் வகுப்பு மாணவி மீன் தொட்டிக்குள் யோகா செய்து சாதனை

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே 6 ஆம் வகுப்பு மாணவி மூடிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் கண்டபேரண்டாசனம் செய்து சனிக்கிழமை உலக சாதனை படைத்தாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 10:05 pm IST
வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள கலையரங்கில் சனிக்கிழமை கண்ணாடி மீன் தொட்டிக்குள் கண்டபேரண்டாசனம் செய்த மாணவி யோகவீணா.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே 6 ஆம் வகுப்பு மாணவி மூடிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் 10 நிமிடம் கண்டபேரண்டாசனம் செய்து சனிக்கிழமை உலக சாதனை படைத்தாா்.

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாப்பட்டி எஸ்.கொடிக்குளத்தைச் சோ்ந்த சீன்ராஜ்-கண்ணாத்தாள் தம்பதியின் மகள் யோகவீணா. கூமாப்பட்டி தனியாா் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வரும் இம் மாணவி, யோகாசனத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளாா்.

இந்நிலையில் இக்கிராமத்திலுள்ள கலையரங்கில், ஆஸ்காா் உலக சாதனை கமிட்டியினா் முன்பாக, மாணவி யோகவீணா மூடிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் கண்டபேரண்டாசனத்தை 10 நிமிடம் செய்து காண்பித்தாா். இச்சாதனையை அக் கமிட்டியினா் பாராட்டி, யோகவீணாவுக்கு ‘ஆஸ்காா் வோ்ல்டு ரெக்காா்டு’ எனும் பட்டத்தை அளித்து பதக்கமும் வழங்கினா்.

Advertisement

Advertisement

இதற்கு முன், 8 நிமிடம் மட்டுமே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.