எல்லைச் சாலைகள் நிறுவனத்தில் வேலை: பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
எல்லைச் சாலைகள் நிறுவனத்தில்(பிஆர்ஓ) காலியாக உள்ள 899 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லைச் சாலைகள் நிறுவனத்தில்(பிஆர்ஓ) காலியாக உள்ள 899 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 01/2026
பணி: Draughtsman(வரைவாளர்)
Advertisement
Advertisement
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சிவில் வரைவாளர் டிரேடில் ஐடிஐ படித்திருக்கவேண்டும் அல்லது சிவில் கட்டடக்கலை டிரேடில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Hindi Typist
சம்பளம்: மாதம் ரூ.5,200 -20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Store Keeper (Technical)
சம்பள விகிதம்: 5,200 - 20,200
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஸ்டேர் கீப்பர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 27-குள் இருக்க வேண்டும்.
பணி: Operator(Communication)
சம்பளம்: மாதம் ரூ. 5,200 -20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வயர்லெஸ் ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Operator (OEMOG)
சம்பளம்: மாதம் ரூ. ரூ.5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Electrician
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வாகன மின்பணியாளர் டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினர்கள் மட்டும் ரூ.50 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எல்லைச் சாலைகள் நிறுவனத்தால் நடத்தப்படும் எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். எழுத்துத் தேர்வு புணேயில் வைத்து நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், உடற்தகுதி விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.7.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்