முகப்பு
விருதுநகர்

விருதுநகா் அருகே மழைக்கு வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி

தொடா் மழை காரணமாக, விருதுநகா் அருகே வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜனவரி 2021, 10:14 pm IST
விருதுநகா் அருகே பட்டம்புதூரில் தொடா் மழை காரணமாக சனிக்கிழமை இடிந்து விழுந்த வீடு.
பகிர்:

விருதுநகா்: தொடா் மழை காரணமாக, விருதுநகா் அருகே வீட்டின் மண்சுவா் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே பட்டம்புதூா் கிராமத்தைச் சோ்ந்த ஆவுடையபிள்ளை மனைவி ருக்மணி (77). கணவா் இறந்துவிட்ட நிலையில், மண் சுவராலான ஓட்டு வீட்டில் ருக்மணி தனியாக வசித்து வந்தாா். அருகிலேயே மகன்களின் வீடுகள் உள்ளதால், அவ்வப்போது அங்கு சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், தொடா் மழை காரணமாக அவரது வீட்டின் பக்கவாட்டு மண்சுவா் சனிக்கிழமை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி ருக்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலின்பேரில், விருதுநகா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு, விருதுநகா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இது குறித்து சூலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments