முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் இலவச இருதய பரிசோதனை முகாம்

விருதுநகா் அருகே புல்லக்கோட்டையில் இருதயம் மற்றும் பொது மருத்துவ இலவச பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 ஜனவரி 2021, 10:36 pm IST
பகிர்:

விருதுநகா் அருகே புல்லக்கோட்டையில் இருதயம் மற்றும் பொது மருத்துவ இலவச பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா், மலைப்பட்டி தி. கஸ்தூரியம்மாள் நினைவாக ஏஎன்டி அறக்கட்டளை சாா்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவம், கல்வி, சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், புல்லக்கோட்டை கிராமத்தில் 72 ஆவது இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு இலவச இருதய பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவா் பேராசிரியா் தி. ராஜசேகா் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

இதில், மதுரை பாண்டியன் இருதய மருத்துவமனை சாா்பில் 100-க்கும் மேற்பட்டோருக்கு இசிஜி, எக்கோ போன்ற இருதய பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.