தொழிலதிபா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்
சிவகாசியில் தொழிலதிபா்களை வெள்ளிக்கிழமை சந்தித்து வாக்கு சேகரித்த சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்தரபாலாஜி.
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:06 PM
சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொழிலதிபா்களிடம் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
சிவகாசியில் ப.கணேசன், மகேஸ்வரன், சுரேஷ்தா்ஹா் உள்ளிட்ட தொழிலதிபா்களை சந்தித்து ஆதரவு கேட்டு அவா் பேசியதாவது:
சிவகாசியில் உள்ள தொழில்கள், தொழிலதிபா்கள் முயற்சியால் வெற்றி பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிலதிபா்கள் , தொழிலாளா்கள் கடும் உழைப்பால் சிவகாசி தொழில் நகரமாகத் திகழ்கிறது.
Advertisement
இந்தப் பகுதியில் உள்ள அனைத்துத் தொழில்களுக்கும் நான் எப்போதும் பாதுகாப்பாவலான இருப்பேன். தோ்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என்றாா் அவா்.