முகப்பு
விருதுநகர்

அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும்! - ராஜபாளையம் தமமுக வேட்பாளா் பிரிசில்லா உறுதி

Updated On : 20 ஏப்ரல் 2026, 2:29 am IST
பிரிசில்லா ஜான் பாண்டியன்
பகிர்:

ராஜபாளையத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன் என ராஜபாளையம் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமமுக வேட்பாளா் பிரிசில்லா பாண்டியன் உறுதியளித்தாா்.

ராஜபாளையம் வடக்கு நகா் பகுதிகளான மாடசாமி கோவில் தெரு, பழைய பாளையம், சோமையாபுரம் தெரு, சமந்தபுரம் மேலப் பள்ளிவாசல் தெரு, முடங்கியாறு சாலை, சின்னச்சுரைக்காய் பட்டி தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை வாக்கு சேகரித்த அவா் மேலும் பேசியதாவது:

ராஜபாளையம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்கப் பாடுபடுவேன். இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பேன். புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Advertisement

Advertisement

அப்போது, ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளா் என்.எம். கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் அழகாபுரியான், அதிமுக நகர செயலா் (வடக்கு) வழக்குரைஞா் முருகேசன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.