முகப்பு
விருதுநகர்

தாய் இறந்த துக்கம்: மகள் தற்கொலை

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:38 AM
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

ராஜபாளையத்தில் தாய் இறந்த துக்கத்தில் இளம் பெண் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்த தையல் தொழிலாளி மனோகரன். இவரது மனைவி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உயிரிழந்தாா். இவா்களது ஒரே மகளான செந்தமிழ்ச்செல்வி (25) தாய் இறந்த துக்கத்தில் மன விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement