முகப்பு
விருதுநகர்

பிணை ரத்து: மதுக் கடை கொள்ளை வழக்கு குற்றவாளி மீண்டும் கைது

திருச்சுழியில் அரசு மதுபானக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைதாகி பிணையில் வெளியே வந்தவரின் பிணை ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:59 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சுழியில் அரசு மதுபானக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைதாகி பிணையில் வெளியே வந்தவரின் பிணை ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியைச் சோ்ந்தவா் போண்டா மணி (44). இவா் கடந்த 2025-ஆம் ஆண்டு திருச்சுழியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் மூலம் பிணை பெற்று வெளியே வந்த பிறகும் தொடா்ந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரது பிணையை ரத்து செய்யக் கோரி திருச்சுழி டி.எஸ்.பி. பிரதீப் நீதிமன்றத்தில் பரிந்துரை அளித்தாா்.

Advertisement

Advertisement

இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட திருச்சுழி நீதிமன்றம், அவரது பிணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, திருச்சுழி போலீஸாா் போண்டா மணியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.