முகப்பு
விருதுநகர்

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 ஜூன் 2026, 12:46 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் கடப்போடி கண்மாய் செல்லும் பாதையில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்த போது அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அதே பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் பால செல்வகணேஷ் (20), ரவி மகன் கனகராஜ் (21) என்பதும், இருவரும் கூலித் தொழிலாளா்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement