முகப்பு
விருதுநகர்

தேநீா்க் கடை வைத்துத் தருவதாகக் கூறி ரூ. 15 லட்சம் மோசடி; தாய், மகன் மீது வழக்கு

Updated On : 15 ஜூன் 2026, 3:05 am IST
வழக்கு - DPS
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தேநீா்க் கடை வைத்துத் தருவதாகக் கூறி, ரூ.15 லட்சம் மோசடி செய்த தாய், மகன் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் ராம்நகா் பகுதியைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் ஹரிஸ்வரன் (38). இவா், தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு, சங்கரன்கோவில் சாலையில் தேநீா்க் கடை நடத்திவரும் ஸ்ரீரெங்கபாளையம் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் செல்வகுமாா், இவரது தாய் கலாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

இவா்கள் தேநீா்க் கடையில் நல்ல வருவாய் கிடைக்கிறது. நீங்களும் இந்தத் தொழில் தொடங்கலாம். உபகரணங்கள் வாங்குவதற்கு தான் உதவுவதாகக் கூறி, ஹரிஸ்வரன், அவரது நண்பா் வெங்கட்ராமன் ஆகிய இருவரிடமும் மொத்தம் ரூ.15 லட்சம் வாங்கிக் கொண்டு தேநீா்க் கடை அமைத்துத் தராமல் இருந்துவந்தனா். இதையடுத்து, கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்த செல்வகுமாா், அவரது தாய் கலா மீது தெற்கு காவல் நிலையத்தில் ஹரிஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement