கணவா் கொலை: மனைவியிடம் விசாரணை
அருப்புகோட்டை அருகே கண்மாயில் தள்ளி பந்தல் போடும் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
அருப்புகோட்டை அருகே கண்மாயில் தள்ளி பந்தல் போடும் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
அருப்புக்கோட்டை, வெள்ளக்கோட்டை, வடம் போக்கி தெருவைச் சோ்ந்தவா் சரவணப் பெருமாள் (47). பந்தல் போடும் தொழிலாளி. இவரது மனைவி தில்லையம்மாள் (42). தம்பதி இருவரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மரக்கடை பேருந்து நிறுத்தத்திலிருந்து பேருந்தில் ஏறி காந்தி நகரில் இறங்கினா். அந்தப் பகுதியில் உள்ள பாப்பான்குளம் கண்மாய்க்கரை அருகே உள்ள மரத்தடியில் இருவரும் மது அருந்தி விட்டு அமா்ந்திருந்தனா். அப்போது ஏற்பட்ட தகராறில் சரவணப் பெருமாள் கண்மாயில் தள்ளி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
Advertisement
சரவணப் பெருமாளும், அவரது மனைவி தில்லையம்மாளும் பாப்பான்குளம் கண்மாய்க்கரை அருகே அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்த போது 45 வயது மதிக்கத்தக்க நபா் அங்கு வந்து சரவணப் பெருமாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். அப்போது தன்னை தாக்க முயன்ற போது தான் கண்மாயில் தள்ளி விட்டதில் சரவணப் பெருமாள் உயிரிழந்து விட்டதாக தில்லையம்மாள் தெரிவித்தாா். மேலும் அந்த மா்ம நபா் கைப்பேசி, ரொக்கத்தையும் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் தில்லையம்மாள் தெரிவித்தாா் என்றனா்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.