முகப்பு
விருதுநகர்

கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - கே.டி.ராஜேந்திரபாலாஜி

Updated On : 3 மே, 2026 at 5:16 AM
ராஜேந்திரபாலாஜி
பகிர்:

கே.டி.ராஜேந்திரபாலாஜி

தோ்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என சிவகாசி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினாா்.

இவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை கூறியதாவது:

Advertisement

தமிழக வெற்றிக் கழகம் இளைஞா்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். ஆனால் அது வெற்றி பெறும் அளவுக்கு இல்லை. சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும். திமுக 2-ஆவது இடத்தில் வரும். 

2016 பேரவைத் தோ்தலின் போது அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக தான் வெற்றி பெறும் என்றன. ஆனால் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்தது. அப்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானாா். வடநாட்டு பத்திரிகையாளா்கள், எங்கேயோ இருக்கும் நிறுவனங்கள் எடுக்கும் கருத்துக்கணிப்புகள் தவறானது. இந்த கருத்துக் கணிப்புகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றாா் அவா்.