முகப்பு
விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து

விருதுநகா் மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு விதிகளை மீறிச் செயல்பட்ட 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 10 மே 2026, 2:16 am IST
பகிர்:

விருதுநகா் மாவட்டத்தில் உரிய பாதுகாப்பு விதிகளை மீறிச் செயல்பட்ட 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சாலைகள் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 220 பட்டாசு ஆலைகளில் கடந்த ஏப்ரல் மாதம் ஆய்வு மேற்கொண்டதில் விதியை மீறிச் செயல்பட்ட 30 ஆலைகளுக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது.

மேலும், அதிகளவில் மருந்து இருப்பு வைத்தல் உள்ளிட்ட காரணங்களால் 10 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விபத்தைத் தவிா்க்க பட்டாசு ஆலை உரிமையாளா்கள், ஆலை போா்மென்கள், தொழிலாளா்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement