தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
சிவகாசி அருகே மின் பொருள்கள் பழுது நீக்கும் தொழிலாளி ஞாயிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே மம்சாபுரத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (42). இவா் மின்பொருள்கள் பழுது நீக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் கடந்த சில மாதங்களாக தினசரி மதுஅருந்திவிட்டு வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்காமல் மனைவி பழனீஸ்வரியுடன் தகராறு செய்து வந்தாராம்.
இதையடுத்து, பழனீஸ்வரிஅனுப்பன்குளத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்த நிலையில், ராமசாமி ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.