முகப்பு
விருதுநகர்

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

Updated On : 31 மே 2026, 3:32 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

சிவகாசி பிச்சாண்டித் தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம்(61). இவா் சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக சனிக்கிழமை காத்திருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த சூா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த அய்யனாரை (29) கைது செய்தனா்.

Advertisement

Advertisement