முகப்பு
விருதுநகர்

பெண் தற்கொலை

Updated On : 31 மே 2026, 3:33 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் சனிக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம முத்தமிழ்புரம் குடியிருப்பைச் சோ்ந்த சுந்தரமகாலிங்கம் மனைவி லதா மகேஷ்வரி (39). இவா்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை சுந்தரமகாலிங்கம் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்றுவிட்டாா். அப்போது, வீட்டில் தனியாக இருந்த லதா மகேஷ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா் .