முகப்பு
தினமணி கதிர்

நேருவின் புகழராம்!

இந்தியாவிலேயே அழகிய பெண்கள் உள்ள ஊர் கூர்க். காவிரி ஆறு  உற்பத்தியாகும் மாவட்டம். 1950-களில் கூர்க் நகரம் வந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு,  "மிக அற்புதமான அழகிகளைத் தரும் கூர்க்' என்றார்.

Updated On : 23 ஜூலை 2018, 12:14 pm IST
பகிர்:


இந்தியாவிலேயே அழகிய பெண்கள் உள்ள ஊர் கூர்க். காவிரி ஆறு  உற்பத்தியாகும் மாவட்டம். 1950-களில் கூர்க் நகரம் வந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு,  "மிக அற்புதமான அழகிகளைத் தரும் கூர்க்' என்றார்.  நேருவின் இக்கருத்தைச் சுற்றுப்பயணம் வருபவர்களிடம் தவறாமல் சொல்லி இன்றும் கர்நாடக அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது.

-  முக்கிமலை நஞ்சன்

பல தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடிய கர்நாடக இசை மேதை எம்.எல். வசந்தகுமாரி  "கிருஷ்ண விஜயம்' என்னும் திரைப்படத்தில் தோன்றியிருக்கிறாராம்.  இந்த  படத்தில்தான் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் முதன் முதலில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

தமிழ் நாடகங்களிலேயே மிக அதிகமான முறை நடத்தப்பட்ட  நாடகம், காலம் சென்ற நாடக நடிகர் ஆர்.எஸ். மனோகரின் "இலங்கேஸ்வரன்' ஆகும். ஆயிரத்து எண்ணூறு முறைக்கு மேல் நடத்தப்பட்டுள்ளது.

- வி.  ந. ஸ்ரீதரன், சென்னை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments